நிரந்தரம் இல்லா வாழ்க்கையில் நிம்மதி இல்லை

சந்தோசம் ஒரு நிமிடம் துன்பத்தில் பல நாட்கள்
வரும் துன்பம் ஒன்றாய் வரும் வருந்தி சொன்னால்
உணர்ந்து புரிந்து கொள்ளவார் யார் .... ?

வேடிக்கையான உலகில் வாழ முடியவில்லை
வாழ்ந்தாலும் உயர்வு விட்டுகொடுப்பு இல்லை
சந்தர்ப்பவாத உலகில் வாழ்வது கடினம்
வாழ்ந்துதான் ஆக வேண்டும் என்ற விதி

இது தான் வெளிநாட்டு வாழ்கை !

சொர்கமே என்றாலும் நம் தாயின் மடியும்
தாய்நாடும் போலாகாது ஒரு பிடி சோறு உண்டாலும்
அது போல நிம்மதியும் சந்தோசமும்
மறு ஜென்மத்திலும் இல்லை !


அன்புடன் நான் உங்களுடன்

நிரந்தரமற்ற உலகில் நிம்மதியை எங்கே தேடுவது ......

Saturday, July 24, 2021
0 Comments
இனியமான அன்புக்கு - தமிழ்
இலக்கணம் தேவையில்லை
நம்மை நாம் புரிந்து கொள்ளும்
புரிந்துணர்வு ஒன்றே போதும்..



என்றும் அன்புடன்..

இனியமான அன்பு ...

Tuesday, July 13, 2021
0 Comments
எமை நேசிக்கும் உறவு
இமையாய் இருக்கையில்
சுமை எதுவும் நெருங்கி
எமை தொடராது.



என்றும் அன்புடன்

சுமை நீங்க . . .

Thursday, July 8, 2021
0 Comments

இனிய உலகில் இருக்கும் போது
வெள்ளையன் உலகில் ஓர் வெளிச்சம்
இப்போ வழமை மாறி பழமை மாறி 
பண்பாடு மாறி பரிதவிக்கும் போது
உள்ளமும் உலகும் இருட்டாய் . . .


யாரிடம் சொல்வது யாருதான் கேட்பது
அன்புடன் நான் உங்களுடன்

முகப்புத்தகத்தில் பார்வையிட ....

‪‎இனிய உலகு நம் தேசம் !‬

Saturday, August 15, 2015
0 Comments

உலகமே தெரியாத ஆணும்
உணர்வுகளை புரியாத பெண்ணும்
உண்மையின் பார்வையில்
உயிர் அற்ற யடங்களே !


உணர்வு . .



என் இனிய   இணைய நண்பா்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள். 

தமிழர் திருநாளாம் தைத்திருநாளில் அகில உலகத்தில் பரந்து வாழும் அனைத்து உறவுகளும் சகல சௌபாக்கியமும் பெற்று சீரும் சிறப்புடன் வாழ நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்பாளைப் பிரார்த்திக்கின்றேன்.

அனைத்து உறவுகளினதும் வாழ்வில் வறுமைகள் நீங்கி துன்பங்கள் விலகி என்றும் வளம் பொங்க வாழ்த்துகின்றேன்.

பொங்கலோ பொங்கல் !

வாழ்க வளமுடன்

அன்புடன்
அம்பிகை ரஐீ

இனிய தை பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் ! ! ! 15.01.2015

Thursday, January 15, 2015
0 Comments
http://ambi-rajee.blogspot.fr/

என் இனிய இணைய உறவுகள் அனைவருக்கும் என் இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துக்கள் அனைத்து உறவுகளதும் வாழ்வில் துன்பம் எனும் இருள் விலகி  இன்ப ஒளி பரவ வாழ்த்துகின்றேன்.


வாழ்க வளமுடன்
அன்புடன்
அம்பிகை ரஐீ

இனிய தீபத்திருநாள் நல் வாழ்த்துக்கள் ! ! !

Tuesday, October 21, 2014
0 Comments






அன்பென்ற வார்தைக்கு என் மன
அகராதி தரும் விளக்கம் அம்மா
அருகில் இருந்தால் புரியாது
ஆதரவு இன்றி தவிக்கும் போது தான் புரியும்.

அனைத்து அன்னையர்க்கும் அன்னையர் தின நல் வாழ்த்துகள்

என்றும் அன்புடன்
அம்பிகை ரஐீ

அன்னையர் தின நல் வாழ்த்துகள்

Sunday, May 11, 2014
0 Comments
என் இனிய காதலர்தின நல்வாழ்த்துக்கள்...

காதலிக்காக ! ! !

கற்கள் அடித்த போதும் 
முட்கள் குற்றிய போதும்
வலி தெரியவில்லை .... நீ
என் கரம் பிடித்திருந்தாய்


குண்டு குழியில் வண்டி பிரயாணித்தபோதும்
வண்டி வழி தடுமாறிய போதும் நான்
கண்டு கொள்ள வில்லை.... நீ
என் வண்டியில் அமர்ந்திருந்தாய்

கவலை பல இருந்தபோதும்
கருத்து முரண் வந்த போதும்
கண் கலங்க வில்லை... நீ
என் தோள் சாய்ந்திருந்தாய்

உனை நேசித்ததில் இருந்து
ஒவ்வொருதினமும் காதலர் தினம்

உன் கரம் பிடிக்கும் நாளே என்
உண்மைக்காதலர் தினம்
அதற்காக காத்திருக்கின்றேன்
தினம் தினம் ......

நினைவுகள் மீட்டி பார்க்க
நிமிடங்கள் போதாது
உன் நினைவுகளோடு நான்...

என்றும் அன்புடன்.....
Ambi Rajee


முகப்புத்தகத்தில் பார்வையிட ....

காதலிக்காக ! ! !

Thursday, February 13, 2014
0 Comments
என் அன்பே   

நம் காலத்தின் ஓட்டம் எமை 
கரை காண வைத்தாலும் - சில 
காரணங்கள் எம்மை நிலையாக
கரை சேர விடுவதில்லை...

என்றும் அன்புடன் 


கரை காண காத்திருப்போம் ! ! !

Tuesday, January 28, 2014
0 Comments
என் இனிய  
இணைய நண்பா்கள் அனைவருக்கும் என் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

அனைத்து உறவுகளினதும் வாழ்வில் வறுமைகள் நீங்கி துன்பங்கள் விலகி என்றும் வளம் பொங்க வாழ்த்துகின்றேன்.

வாழ்க வளமுடன்.

என்றும் அன்புடன்



இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்....

Monday, January 13, 2014
0 Comments
என் இனிய இணைய நண்பா்கள் அனைவருக்கும் என் இனிய புதுவருடவாழ்த்துக்கள் நல் வாழ்த்துக்கள்.

மலருகின்ற புதுவருடம் அனைத்து உறவுகளின் வாழ்வில் ஒளிமயமாக மலர வேண்டும் என அம்பாளை பிரார்த்திக்கின்றேன்.

வாழ்க வளமுடன்..


என்றும் அன்புடன்





இனிய புதுவருட நல் வாழ்த்துக்கள் 2014

Tuesday, December 31, 2013
1 Comment
என் அன்பே...

நான் இஷ்டப்படும் போது
நீ காட்டும் அன்பை விட
நான் கஷ்ட படும் போதும்
நீ காட்டும் அன்பே சிறந்தது

கண்டிக்க மனசில்லை !!!
தண்டிக்க வழியில்லை !!!
என்றைக்கும் உன் அன்புக்காக !!!

என்றும் அன்புடன்
Ambi Rajee.




உன் அன்புக்காக !!!

Monday, November 25, 2013
0 Comments
என் கற்பனைத்துளி   

பெண்ணுக்கு பெருமை நற்க்குணம் - தமிழ்
மண்ணுக்கு பெருமை நல் மணம்
விண்ணுக்கு பெருமை வர்ண மேகம் - உன்
கண்ணுக்கு பெருமை நீ என் மேல் கொண்ட காதல் மோகம்.


என்றும் அன்புடன்
AMBI RAJEE




காதல் மோகம்.

Friday, November 15, 2013
0 Comments
இணையத்தளத்திற்கு வருகை தந்த என் இனிய உறவுகள் அனைவருக்கும்
இதயம் கனிந்த தீபவாளித் திருநாள் நல் வாழ்த்துக்கள்.

அனைத்து உறவுகளினதும் வாழ்வில் 
துன்ப இருள் விலகி இன்ப ஒளி
என்றும் பரவ வாழ்த்துகின்றேன்.


வாழ்க வளமுடன்

என்றும் அன்புடன்





இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

Friday, November 1, 2013
0 Comments
என் அன்பே.......

என் நிழலாய் நீ இருந்த வேளை
உன் நினைவுகள் என்னிடத்தில் இல்லை
உன் நினைவுகள் என்னிடத்தில் உள்ள தருணம்
என் நிழல் நீ இல்லை...

நிசப்தத்தில் நீ இருப்பதால்
சலனத்தில் நான்....

என்றும் அன்புடன் 

AMBI RAJEE
At facebook

என்னிடத்தில் நீ இல்லை...

Tuesday, October 15, 2013
0 Comments

sad song (நெஞ்சே நெஞ்சே பாவை நெஞ்சே....)

Tuesday, October 1, 2013
0 Comments
என் இனியவளே   

பசுமை நிறைந்த நினைவுகளுடன்
பட்டாம் பூச்சியாய் பறந்து வா - உயிரே
உனக்காக காத்திருக்கின்றேன் 
என் இருதயத்தைப்பரிசளிக்க!

என்றும் அன்புடன் நான் உன்னுடன்
AMBI RAJEE


At facebook

உனக்காக காத்திருக்கின்றேன்

Sunday, September 8, 2013
0 Comments
மனித நேயம்.....

மனம் விட்டு யோசியுங்கள் மாபாவி செய்வது சரியா!


மணல் போட்டு மூடியவன் மலர் போட்டு திறக்கின்றான்
மனம் விட்டு யோசியுங்கள் மாபாவி செய்வது சரியா!

நல்லைக்கந்தனை நனைக்க எண்ணுகிறான் நரகத்தால்
நசுக்கியதை மறந்து
மனம் விட்டு யோசியுங்கள் மாபாவி செய்வது சரியா!

மாயவன் சோதரனை வசப்படுத்துவது தான் செய்த
மாயைதனை முடக்குவதற்க்கா!
மனம் விட்டு யோசியுங்கள் மாபாவி செய்வது சரியா!

மழையாய் பலி எடுத்தவன் ஆத்ம சாந்திக்கா!
மலராய் துாவுகின்றான்
மனம் விட்டு யோசியுங்கள் மாபாவி செய்வது சரியா!

மண்ணைக் கேட்ட நம் உறவுகளுக்கு சாமத்தியமாய்
விண்ணைக் காட்டியவன்
மனம் விட்டு யோசியுங்கள் மாபாவி செய்வது சரியா!

பச்சிளம் குழந்தைகளை பதற பதற பலி கொண்டவன்
பதற்றமின்றி பறந்து காட்டுகின்றான்
மனம் விட்டு யோசியுங்கள் மாபாவி செய்வது சரியா!

மலர் துாவுகிறாய் வரவேற்க தக்கதாய் இருந்தாலும் நாங்கள்
வரம் கேட்கவில்லை உன்னிடம் துர் மரணத்தை
மனம் விட்டு யோசியுங்கள் மாபாவி செய்வது சரியா!

இயமனுக்கு கூலி கொடுத்தவனுக்கு ஜெயம் குடுத்திடாதீர்
நாமம் போட்டு விடுவான் (தற்கால நடப்பு)
மனம் விட்டு யோசியுங்கள் மாபாவி செய்வது சரியா!

இறை பழியை எண்ணவில்லை அதில் உள்ள
மறை பழியை கூறி நின்றேன்.
மனம் விட்டு யோசியுங்கள் மாபாவி செய்வது சரியா!

தமிழனாய் சிந்தித்து முடிவெடுங்கள்...
மடத்தமிழனாய் இருந்தது போதும்
மாபாவி செய்வது சரியா!

அன்புடன்
Ambi Rajee

மனித நேயம்.....( மனம் விட்டு யோசியுங்கள் மாபாவி செய்வது சரியா!)

Wednesday, September 4, 2013
0 Comments
என் அன்பே   

நம் காலத்தின் ஓட்டம் எமை 
கரை காண வைத்தாலும் - சில 
காரணங்கள் எம்மை நிலையாக
கரை சேர விடுவதில்லை...

At Facebook


நம் கரை காணலாமா..

Sunday, September 1, 2013
0 Comments
என் அன்பே   

என் கற்பனைத் துளிகள் அல்ல கவி வரிகள் - நீ
கண்ணீர் துடைக்க கரம் தருவாய் என
கவி வரி தொடர்ந்தேன் முடியவில்லை!!
வெந்நீரில் 
என் கண்ணீர்த்துளிகள் வரிகளாய்...

என்றும் அன்புடன் நான் உன்னுடன்
AMBI RAJEE




என் கண்ணீர்த்துளிகள்.....

Saturday, August 31, 2013
1 Comment

என் உறவே   

சிந்திக்கத்துாண்டும் வரிகளுடன்
சிறுநேரம் சிந்தனைக்கு எட்டாத
நம் உறவை தினமும் எண்ணி
இன்று நிந்தனை படுகிறேன்...

என்றும் அன்புடன்
AMBI RAJEE


நம் உறவை எண்ணி.....

Thursday, August 29, 2013
0 Comments
என் உயிரே   

என் உரிமைகளை புரிந்து கொண்ட உனக்கு 
என் உணர்வுகளை புரிந்து கொள்ள முடியவில்லை 
என்றே ஒருநாள் அதை நீ உணர்ந்து கொள்வாய்
அன்றே என்னையும் புரிந்து கொள்வாய் ...

என்றும் அன்புடன் நான் உன்னுடன்
AMBI RAJEE



At facebook


என் புரிந்துணர்வு....

Wednesday, August 28, 2013
0 Comments

காதல் செய்தாய் எனைக்
காவல் செய்தேன்

போகம் வந்தது காதல்
மோகம் கொண்டேன்

பாவம் செய்தேன் மனப்
பாரம் சுமந்தேன்

வெறுப்பில் பேசினாள்
முறைப்பில் பார்த்தேன்

கண்டு கொண்டேன்
காதலியின் குறையல்ல
காதலின் குறையல்ல

காரணம் அறிந்தேன் - அவள்
காலத்தின் பிழையென

கணக்கு முடியும் வரை
பிணக்கு போடதீர்

காரணம் அறியாமல்
காதலியிடம் குறை காணாதீர்கள்.

என்றும் அன்புடன் நான் உன்னுடன்...

Ambi Rajee.

Face book link

காதலியிடம் குறை காணாதீர்கள்.........

Sunday, July 21, 2013
0 Comments
நயினாதீவு தெற்கு இந்து இளைஞர் மன்றகட்டிட வேலைத்திட்டம் நடை பெற்று வருகின்றது தாங்கள் அனைவரும் அறிந்ததே தற்சமயம்  மன்ற கட்டிடத்திருப்பணி நிதிப்பற்றாக்குறை காரணத்தில் முற்றுப் பெறாமல் இருப்பதனால் எம் மண்ணின் மீதும் மன்றத்தின் மீதும் பற்றுள்ள உறவுகள் முழு உற்சாகத்துடன் செயற்படும் மன்ற நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு மன்ற கட்டிடம் முழுமையடைய உங்களால் இயன்ற உதவிகளினை நல்குமாறு பணிவாக வேண்டுகின்றோம்..... 





நயினாதீவு தெற்கு இந்து இளைஞர் மன்றகட்டிடத்திற்காக மிகுதியாக உள்ள முடிவுறாத வேலைகள்
  பற்றிய தரவுகள் விபரம்...

1. தளம் இட்டு மாபிள் பதிப்பு
2. முகட்டு வேலைத்திட்டம்


3. முழுமையடையா சுவர் பூச்சு வேலைத்திட்டம்

4. முழுமையான வர்ணப் பூச்சு வேலைத்திட்டம்
5. மேல் மட்ட சீற் அடித்தல்


6. முற் பகுதியில் சிறிய இறக்கம்

7. கதவு யன்னல் வேலைத்திட்டம்




நன்றி.

தகவல்
நயினாதீவு தெற்கு இந்து இளைஞர் மன்றம்

நயினாதீவு .

தொடர்புகள்:


தலைவர் :0094770181038 கங்காதரன்

காரியதரிசி: 0094757284825 சக்திவேல்





புகைப்படம் இணைப்பு






நயினாதீவு தெற்கு இந்து இளைஞர் மன்றகட்டிட வேலைத்திட்டம்

Saturday, July 13, 2013
0 Comments

- Copyright © இனிய பொழுது..... - NAINATIVU - Powered by RAJEE - Designed by AMBIKAIBALAN RAJEETHAN -